Wednesday 25 November 2015

உலகத்தில் எந்த புரட்சியாளனுக்கும் சற்றும் குறைவு இல்லாத தலைவன் பிரபாகரன்

 


சீனா நாட்டின் விடுதலைக்கு போராடிய மாசே துங் அருகிலே இருக்கிற நாடுகளின் ஆதரவை பெற்று, தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு


வியட்நாம் நாட்டின் விடுதலைக்கு போராடிய ஹோ சி மின், பல அயல் நாட்டின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.


கியூபா விடுதலைக்கு போராடிய பிடெல் காஸ்ட்ரோ, சே குவேரா , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.


பாலஸ்தீன விடுதலைக்கு போராடிய யாசர் அராபத் , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு


இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ராணுவ உதவியை பெற்று போராடியது வரலாறு


ஆனால்


உலகத்தில் எந்த நாட்டு ஆதரவும் இல்லாது, தான் பிறந்த தமிழீழ நாட்டை தவிர வேறு எங்கும் கால் பாதிக்காது, தன் சொந்த நாட்டு மக்களையே படையாக திரட்டி தன் தாயக விடுதலைக்கு போராடிய உலகத்திலே ஒரே புரட்சியாளன் மேதகு வே.பிரபாகரன் அவர்களே.





No comments:

Post a Comment