Thursday 21 May 2015

எனது அன்புக்கும் மதிப்புக்கும்உரிய தமிழீழ மக்களே ....!

எமது போராட்ட வரலாறு இன்று என்றும் இல்லாத அளவு ஒரு மாபெரும் சர்வதேச அரசியல் சதி வழியில் சிக்கி சீரழிந்து கொண்டுள்ளது. .

எண்ணற்ற மாவீர செல்வங்களின் உயிர் தியாகங்களை விலையாக கொடுத்து கட்டி எழுப்பிய எமது விடுதலை போராட்டம் இன்று ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது .

எமது தேசத்தின் விடுதலையை உயிர் மூச்சாக கொண்டு போராடி வீழ்ந்த எம் வீர மறவர்களின் கனவை தோடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டிய  கடமை கொண்ட எமது தேசத்தின் இளைய தலைமுறை அவற்றை எல்லாம் மறந்து சிங்கள அரச பேரினவாதத்தின் சதி வழியில் சிக்கி எமது போராட்டத்தின் பாதையில் இருந்து விலகி தவறான பாதியில் திசை திரும்பியுள்ளனர் .

வீரத்துக்கும் ஏகத்துக்கும் பெயர் போன எம்து ஈழ தேசம்  இன்று மதுவுக்கும் காலாச்சார சீரழிவுகளின் எச்சங்களுக்கும் அடிமையாக தொடக்கி உள்ளது .

எமது மாவீர செல்வங்கள் கண்ட கனவை வெறும் கனவாகவே கலைத்து விடாதீர்கள் தோழர்களே

விழித்தெழுங்கள் இது தான் தருணம் .

No comments:

Post a Comment